Type Here to Get Search Results !

Translate

மனிதனின் ஏழு பிறவிகள் பற்றி தெரியுமா?

மனிதனின் ஏழு பிறவிகள்
மனிதனின் ஏழு பிறவிகள்

மனிதனின் ஏழு பிறவிகள் பற்றி தெரியுமா?

மனிதன் ஏழு பிறவி எடுக்கிறான் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். ஒருவரை நாம் வஞ்சித்து அவர் குடியை கெடுத்தால் ஏழு ஏழு ஜென்மத்திற்கும் பாவம் தீராது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். மனிதன் ஏழு பிறவி எடுப்பது நிஜமா? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

இதை,

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ரூடவ்சனிடம் கதறுகிறார்.

மனிதர் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு ஜீவராசியாக பிறக்கின்றனர். ஒருவர் செய்யும் பாவ புண்ணிய அடிப்படையில் ஒவ்வொரு பிறப்பிலும், மரம், செடி, விலங்கு, பறவை என இறைவனால் படைக்கப்படுகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad