Type Here to Get Search Results !

Translate

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு?

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு?


வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு உண்டு?

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது நமது முன்னோர்களின் முதுமொழி. சங்க காலம் முதல் பொருள் தேடும் பொருட்டு தமிழர்கள் கடல் தாண்டியும் வியாபாரம் செய்துள்ளனர் என்பதற்கு பல புராண செய்திகள் உண்டு.

படித்தவர்கள் எல்லோருமா வெளிநாடு செல்கிறார்கள்! இல்லை, வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லோருமா படித்தவர்களாக உள்ளனர் என்றால் இல்லை என்பது தான் பதிலாக முடியும். அப்படியானால் வெளிநாடு செல்வதற்கு படிப்பு ஓர் தகுதி அல்ல என்பது தெளிவாகிறது. அப்படியானால் வெளிநாடு செல்வது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கு வேதத்தின் கணக்கு எனப்படும் ஜோதிடத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.


வெளிநாடு செல்லும் யோகம் :

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் 9 மற்றும் 12வது இடத்தின் அதிபதிகள் பலம் பெற்றிருந்தால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சந்திரன் பலம் பெற்று அதே 9 மற்றும் 12வது இடத்தின் அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும்.

9 மற்றும் 12 வது இடத்தின் அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2க்கு மேற்பட்ட கிரகங்கள் 9 மற்றும் 12 வது இடத்தில் பலமாக அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும், அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்தி காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும்.

வெளிநாடு செல்ல பரிகாரங்கள் :

காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள முருகனான கந்தசாமி தானாகவே தோன்றிய சுயம்புவாகும். இக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

ஓம் தும் துர்காயை நம என்ற இந்த மந்திரத்தை வீட்டில், ஒரு வெள்ளிக்கிழமை இரவு 108 முறை சொல்லி வந்தால் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வந்தால் வெளியூர் யோகம் உண்டாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad