Type Here to Get Search Results !

Translate

ஜாதகம் இல்லாதவருக்கு அரசு வேலை கிடைக்க பரிகாரங்கள்

அரசு வேலை கிடைக்க
அரசு வேலை கிடைக்க 

அரசு வேலை கிடைக்க...

படித்து முடித்த அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதற்காக கடுமையாக படிப்பர் இருப்பினும் அவர்களால் தேர்ச்சி பெற முடியாமல் போய்விடும். அரசாங்க வேலை கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்ற குழந்தைகள் கல்வி பயில தொடங்கும் காலம் முதல் திங்கட்கிழமைதோறும் முருகனுக்கு விரதம் இருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்று, சனி பகவான் பதவியை கொடுப்பவராக இருந்தால் சிறைத் துறை, தண்டனை தருதல் போன்ற பதவிகளுக்கு உரியவர்கள் கல்வி பயிலும் காலம் தொட்டு சனிக்கிழமைதோறும் விரதமிருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது, ஓம் நமோ நாராயணாய நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டே போனால், நேர்முகத் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணபகவான் துணைக்கு வந்து, அறிவுப்பூர்வமான பதில்களை சொல்ல வைப்பார். வெற்றி எளிதில் வரும்.

பரிகாரம்:

அனுமன், பைரவரை வழிபடுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.

பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம்.

தினசரி காலை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.

14 முக ருத்திராட்சம் அணியலாம்.

சனிக்கிழமை அன்று ஊற வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad