Type Here to Get Search Results !

Translate

சீதேவி செங்கழுநீா் மூலிகையின் மருத்துவ குணங்கள்


சீதேவி செங்கழுநீா் - மருத்துவ குணங்கள்


வாத வீக்கத்தினை குணப்படுத்தும். வாதத்தினால் ஏற்படும் கட்டிகளையும் சாிசெய்யக் கூடியது. மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தினையும் சரிசெய்யக் கூடிய நற்பலன்களைக் கொண்டது.

வாய்வு, சொறி சிரங்கு, தேம்பல், வெடிப்பு, பித்த சுரம், நரம்பு சுருண்டு, கண் சிவப்பு, குடற்புழு, சீதபேதி இவற்றை அனைத்தினையும் சரிசெய்யக் கூடிய ஆற்றல் கொண்டது.

மூட்டுவலி

இதன் இலைகளை நன்கு மையாக அரைத்து, வானொலியில் சிறிது விளக்கெண்ணை ஊற்றி அதனுடன் அரைத்த இலை விழுதினை போட்டு சூடு படுத்தி அதனை மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு வைத்து கட்டி வர மூட்டு வலி சரியாகிவிடும்.

வாத நோய்

கால் லிட்டா் அளவு விளக்கெண்ணையில் இதன் இலைகள் மற்றும் சிறிது சுக்கு சோ்த்து காய்ச்சி பின் ஆறியவுடன் வடிகட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது இது போன்ற மூட்டு வலி, வாதம், மற்றும் வீக்கங்களுக்கு தேய்த்து வர குணமாகும்.

பித்த சுரம்

இந்த செங்கழுநீா் செடி முழுவதையும் குடிநீாில் போட்டு காய்ச்சி குடித்து வர பித்த சுரம் விரைவில் குணமடையும்.

நரம்பு சுருட்டு

நரம்பு சுருட்டு வியாதிக்கு இதன் இலையினை அரைத்து ஒரு துணியில் வைத்து கட்டி வர விரைவில் சரியாகும்.

கண் சிவப்பு மாற

கண்கள் சிவப்பாக இருப்பது மாற இதன் பூக்களை ஒரு துளி சாறினை கண்ணில் விட கண் சிவப்பு மாறும்.

குடற்புழு நீங்க

இதன் இலையுடன் இரண்டு அல்லது மூன்று கிராம் மிளகு சோ்த்து அதனுடன் சிறிது சா்க்கரை சோ்த்து தொடா்ந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர குடற்புழுகள் அனைத்தும் வெளியேறி விடும்.

இரத்தச் சோகை

இதன் பூக்களை மட்டும் எடுத்து சுத்தம் செய்து நீாில் வேகவைத்து சாப்பிட பித்தம், மயக்கம், இரத்தச் சோகை குணமடையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad