மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது
எவ்வாறு உண்மையாகும்?
எவ்வாறு உண்மையாகும்?
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று நமக்கு தோன்றலாம். முதற்பார்வையில் "மன்னிப்பவருக்கு எப்படி ஆயுள் நீடிக்கும்? மன்னிக்கப்பட்டவருக்கு ஆயுள்நீடிக்கும் என்பதில் அர்த்தமிருக்கின்றது" என்றெல்லாம் கேட்டாலும் கேட்கலாம். மேலும் மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனதுக்குள் அடக்கி வைப்பதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு, என்றும் நாம் எண்ணுவதிலும் விஷயமிருக்கின்றது.
நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றி விடுவோமானால், விறைப்பிலிருந்து 3) விடுபட்டு உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி மன்னிக்கின்றவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருந்தும் நீடித்த ஆயுளை பெறுவான் என்பதிலும் சாஸ்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.
பாவம் மனிதத் தன்மைக்குரியதும் மன்னிப்பு இறைவனுக்குரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி டாக்டர் லாரன் எல். டாசன்ட் என்பவரே.
ஒருவருக்கு மன்னிப்பளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவருக்குள் உருவாகின்றதனால் அவர் மகிழ்வுறுகின்றான். ஆனால் தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரை துரத்தி வருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.
மகிழ்வுற்ற மன துடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே டாக்டர் லாரன் எல் டாசன்ட் தன் கண்டுபிடிப்புக்களின் சாரமாக வெளியிட்டுள்ளார்.