Type Here to Get Search Results !

Translate

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?

 பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?


பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவதைத் தடை செய்து ஆசாரியர்கள் விதிவகுத்துள்ளனர். ஆண்களும் சரியான விதிமுறைப்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை என்றும் நாம் காண்கின்றோம்

"உரசா சிரசா வாசா
மனசானுஞ்ஜலினா திருஷா
ஜானுப்பாம் ஜானுப்யாம் சைவ பாதாப்யம்
பிரணாமோ அஷ்டாங்க ஈரித.."

என்பது சாஷ்டாங்க நமஸ்காரத்தைக் குறித்து கூறப்படுவது. மார்பு, நெற்றி, வாக்கு, மனசு, தொழுகை, கண், கால்முட்டு என்பவைகளே சாஷ்டாங்க நமஸ்காரத்தில் உபயோகிக்கும் எட்டு உறுப்புக் கள். நமஸ்கரித்து கிடக்கும் போது இரண்டு கால்களின் பெருவிரல்கள் இரண்டு கால் முட்டுக்கள், மார்பு, நெற்றி என்ற நான்கு பாகங்கள் மட்டுமே தரையில் தொடலாம் என்றும் போதித்துள்ளனர். கைகள் தரையில் தொடாமல் இவ்வாறு கிடக்க முடியாதென்பதால் கவிழ்ந்து கைகளை எடுத்து தலைக்குமேல் நீட்டி வணங்குவதுதான் சாஷ்டாங்க நமஸ்காரம். தரையில் தொட்டிருக்கும் நான்கு பாகங்களும் தொழும் கையும் சேர்ந்து ஐந்தங்கமாகும். எஞ்சிய மூன்றும் வாக்கு, கண், மனது என்பவையாகும். அதில் வாக்கினால் மந்திரம் சொல்லி, கண்களால் தேவனைப் பார்த்து மனதால் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு கவிழ்ந்துபடுத்து செய்வதனால் மார்பீல், அழுத்தி அசௌகரியம் உண்டாவதால் பெண்கள் அனுபலிக்கும் இன்னல்களைத் தவிர்க்கவே பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாகாது என்று விதிக்கப் பட்டிருக்கின்றது.

நவீன மருத்துவத்துறையும் இவ்விதியை ஆமோதிக்கும். கருப்பையின் நன்நிலைக்கு கு இவ்வித நமஸ்காரம் தீங்கிழைக்கும் என்று கூறுகின்றது. கருப்பைக்கு இடம் பெயர்தலும் நிகழலாம் என்றும் இது கீழே தள்ளிவரும் ஆபத்தான நிலை பல பெண்களிலும் காணப்படுவதாகவும் கண்டறிந்தனர். ஆனால் பெண்கள் குனிந்து வணங்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. இது கருப்பையின் நன்நிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மையானதாகக் கருதுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad