எண்ணை தேய்த்துக் குளித்தல் எதற்காக?
விரத நாட்கள் நோன்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதயத் தூய்மையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நம் மூதாதயர் கடை பிடித்திருந்தனர்,
பூசிக்குளித்தல் . அடி முதல் முடிவரை நன்றாக எண்ணை தேய்த்து மூழ்கிக் குளிப்பது நம் முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.
ஆனால் எண்ணை தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பெறும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணை தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன. ஒன்றாவதாக எண்ணையில் மருத்துவ உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத தெரியாத நோயணுக்கள், எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன.